கால்நடைகளுக்கான 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் – முதலமைச்சர்

கால்நடைகளுக்கான 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு, கடந்த செப்டம்பரில் வழங்கவேண்டிய தடுப்பூசிகள் மத்திய அரசால் இதுவரை வழங்கப்படவில்லை என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடைகள் கோமாரி நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் விரைவாக தடுப்பூசி வழங்க கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.