திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில் சென்னையில் இருக்கும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு கவியரங்கம் நடந்தது. இனமானம் காத்த தமிழ் வானம் எனும் தலைப்பில் இந்தக் கவியரங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.
கவியரங்கத்தில் பாடலாசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அப்போது கவிதைகளால் அன்பழகனுக்கு வைரமுத்து புகழாரம் சூட்டினார். அதேபோல் உதயநிதி குறித்து பேசிய வைரமுத்து, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி வாரிசா இல்லை துணிவா என எல்லோருக்கும் கேள்வி இருக்கிறது. அவர் துணிவு மிக்க வாரிசு என்றார்.
நேற்று
அண்ணா அறிவாலயத்தின்
கலைஞர் அரங்கத்தில்
பேராசிரியரின்
நூற்றாண்டு விழாக் கவியரங்கத்திற்குத்
தலைமை ஏற்றேன்விழாவைச் சிறப்பித்த
முதலமைச்சர் அவர்களையும்
பேராசிரியர் குடும்பத்தாரையும்
மகிழ்ச்சியோடு சந்தித்த
நெகிழ்ச்சியான தருணம் pic.twitter.com/pPQt63UeQb— வைரமுத்து (@Vairamuthu) December 18, 2022
அவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இனமான பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னிலையில் கவிப்பேரரசு @Vairamuthu அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற ‘இனமானம் காத்த தமிழ்வானம்’ கவியரங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். pic.twitter.com/PF2GSUFb8Q
— Udhay (@Udhaystalin) December 17, 2022
முன்னதாக, அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.