டிச.21ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 3 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வரும் 21ம் தேதி தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது.

வரும் 22ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக  தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.