துபாய் சென்ற விமானத்தில் கோளாறு: மும்பையில் அவசரமாக தரையிறக்கம்

மும்பை: துபாய் சென்ற விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ெதலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா ஏ320 விமானத்தில் திடீரெ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மும்பையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, துபாய் புறப்பட்டு சென்ற விமானம் அவசர அவசரமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் 143 பயணிகள் இருந்தனர். தற்போது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விமானத்தின் கோளாறை சரிசெய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றது. அதன்பின் விமானம் புறப்பட்டு சென்றது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.