ஒரே நேரத்தில் இரண்டு கையில் எழுதி அசத்தும் நெல்லை கல்லூரி மாணவி

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், ஒரே நேரத்தில் 2 கைகளால் எழுதி வியப்பில் ஆழ்த்தி வருகிறார். பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில், சென்னை மாநகர தமிழ் சங்கம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சுத்தமல்லியை சேர்ந்த மாணவி சாந்தா சர்மிளா, ஒரே நேரத்தில் 2 கைகளாலும் திருக்குறள், செய்திகளை எழுதினார். இதையடுத்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி, அவர் கவுரவிக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.