கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் சாவர்க்கர் படம்: சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து காங். போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

பெலகாவி: கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக சட்டமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், ஆகியோர் படங்களுடன் சாவர்க்கரின் படமும் திறந்து வைக்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களுடன் சாவர்க்கர் படம் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தலைமையில் சட்டமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைசிறந்த இந்திய தலைவர்களின் படங்களுடன் சாவர்க்கர் படத்தை வைத்திருப்பது மூலம் சட்டமன்றத்தின் கண்ணியத்தை பாரதிய ஜனதா கட்சி சிதைத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தை சட்டமன்றத்துக்குள் எழுப்பவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.