தீபிகாவை எதிர்த்தவர்கள் இப்போது உலக கோப்பையை தடை செய்வார்களா? பிரபல நடிகர் கேள்வி!



கத்தார் 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றிக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்த தீபிகா படுகோனை நினைத்து பெருமையாக இருப்பதாக பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கோப்பையை அறிமுகப்படுத்திய தீபிகா

 பிரான்ஸ்- அர்ஜென்டீனா அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன் உலக கோப்பையை அறிமுகப்படுத்தும் சிறப்பு தருணம் லுசைல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் ஸ்பெயின் கோல் கீப்பர் மற்றும் கேப்டன் இகர் கேசிலாஸ் உடன் இணைந்து இந்திய பிரபல பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் உலக கோப்பையை  இரு அணிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.

ஆடம்பர பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் பிராண்ட் தூதராக தீபிகா படுகோன் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு இந்த கவுரவம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இப்போது உலக கோப்பையை தடை செய்வார்களா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் இயக்குனர் சித்தார்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்து இருக்கும் பாதன் திரைப்படத்தின் முதல் பாடல் காட்சி வெளியாகி இருந்தது.

இதில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறம் கொண்ட டூ பீஸ் உடையில் தோன்றியது இந்தியாவில் பெரும் சர்ச்சையாக வெடித்ததுடன் மட்டும் இல்லாமல், திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை “தீபிகா படுகோன் கத்தாரில் நடைபெற்ற கால்பந்து இறுதிப் போட்டியில் உலக கோப்பை அறிமுகம் செய்து வைத்தது பெருமையாக இருக்கிறது” என்று பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் “தீபிகா பதான் திரைப்படத்தில் காவி நிற ஆடை அணிந்து நடனமாடியதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பவர்கள், இப்போது ஃபிஃபா உலக கோப்பையை தடை செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.