
நடிகர் அஜித்குமார் பெயரைக் கூறி மோசடி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எப்பொழுதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் அஜித், எந்தவொரு வம்பு தும்புகளிலும் சிக்காமல் அவரது வேலையில் கவனம் செலுத்தி வருவார். மேலும் பல வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றங்களை முழுவதும் கலைத்தார் .
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றம் மூலமாக, வீடு கட்டி தருவதாக கூறி ரூ.1.10 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது . சிவா என்பவர் மீது நெல்லை விக்ரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் . தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.