கோயிலுக்கு சென்ற இளம்பெண்ணை தந்தை முன் காரில் கடத்திய கும்பல்..!

தெலங்கானாவில், அதிகாலை கோயிலுக்கு சென்ற இளம்பெண்ணை, காரில் கடத்திச்சென்ற கும்பலை, ஆறு தனிப்படைகள் அமைத்து, போலீசார் தேடிவருகின்றனர்.

ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், தந்தையுடன் கோயிலுக்கு சென்ற 18 வயது இளம் பெண்ணை, 3 பேர் கொண்ட கும்பல், வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்ற நிலையில், தடுக்க வந்த பெண்ணின் தந்தையையும் தாக்கிவிட்டு தப்பியது.

சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவர், அந்த இளம்பெண்ணை கடத்தியதாகவும், தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், மீண்டும் கடத்தியுள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.