ரூ.10 ஆயிரம் கோடி அல்ல; ரூ.1200 கோடி தான்! திமுக எம்.பி. கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்

டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.10 ஆயிரம் கோடி  பாக்கி உள்ளதாக கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. வில்சனுக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர், 10ஆயிரம் கோடி அல்ல,  ரூ.1200 கோடி தான் என கூறினார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுக எம்.பி. வில்சன், தமிழகத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி இழப்பீடு பாக்கி ரூ.10 ஆயிரம் கோடி உள்ளதாக தெரிவித்தார். அதை மத்தியஅரசு உடனே ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு பாக்கி ரூ.1200 கோடி மட்டும் தான், ரூ.10 ஆயிரம் கோடி அல்ல என்றவர், ஜிஎஸ்டி இழப்பீடு விரைவில் வழங்கப்படும்  என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.