சட்டப்பேரவைக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ, மருத்துவருடன் கூடிய தனி அறை அமைப்பு..!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு பெண் எம்.எல்.ஏ ஒருவர் தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் வந்ததை அடுத்து அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சரோஜ் அஹிரே வாக் என்பவர் தனது கைக்குழந்தையுடன் (நேற்று முன்தினம்) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றார்.

அப்போது அவர் விடுத்த கோரிக்கையை அடுத்து (நேற்று )அவருக்கு சட்டமன்றத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த அறையில் கொசுவலையுடன் கூடிய தொட்டில் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு பெண் மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.