சர்வதேச கொலைகாரன் சோப்ராஜ் விடுதலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரபல சர்வ தேச கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ் சிறையிலிருந்து விடுதலை ஆனான்.

பிரபல சர்வதேச கொலைகாரன் , சார்லஸ் சோப்ராஜ், 78 பிரான்ஸ் நாட்டில் பிறந்து, வளர்ந்த இவர், நேபாளத்தில், 1975ல், அமெரிக்க பெண்ணை கொன்ற வழக்கில், 2003ல், காத்மாண்டு நகரில் கைது செய்யப்பட்டார். நேபாள நீதிமன்றம், இவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதால், சிறையில் அடைக்கப்பட்டார்.

latest tamil news

தண்டனையை எதிர்த்து நேபாள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வயது முதுமை, உடல் நலம் காரணமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.