காரைக்கால்: காரைக்கால் அடுத்த காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் உட்பட 11 பேர், கடந்த 19ம் தேதி அதிகாலை காரைக்கால் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.
அவர்களை. நேற்று (22ம்தேதி) பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து வரும் 27ம் தேதி வரை 6 நாட்கள் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.