கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால்.. திமுக நிர்வாகி தற்கொலை.!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் திவாகர். இவர் தடபெரும்பாக்கத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும் மற்றும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், திமுக நிர்வாகியான திவாகருக்கும், முனிரத்தினா என்ற ( வயது 22) இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.  இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்க அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதனை வீடியோவாகவும் செல்போனில் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், முனிரத்தினாவின் செல்போனில் இருந்த வீடியோவை, அவருடைய முன்னாள் காதலன் பார்த்துள்ளார். இதனையடுத்து அந்தரங்க வீடியோவை வைத்து திமுக நிர்வாகி திவாகரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு அவர் மிரட்டியுள்ளார். பணம் தரவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து திவாகர் பணம் தர முடியாது என்று கூறியதால், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து திவாகரை சந்தித்த முனிரத்தினாவின் தாய், வீடியோ ஊர் முழுவதும் பரவி விட்டது. எனவே, என் மகளை நீ தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 இதனால், மனமுடைந்த திமுக நிர்வாகி திவாகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து திவாகரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் முனிரத்தினாவின் முன்னாள் காதலன், முனிரத்தினா, அவரது தாய் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மூவரும் தலைமறைவாகினர். அவர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.