ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19-ம் தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார்.
விமான நிலையத்தில் இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை வெளியான பரிசோதனை முடிவில், அந்த இளம்பெண்ணுக்கு புதிய வகை ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளம்பெண்ணை கோண சீமா அரசு மருத்துவமனைக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இளம்பெண்ணின் குடும்பத்தார் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணுக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.