”சீனாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை..?” – மத்திய அரசு

சீனாவுடனான விமானப்போக்குவரத்தை நிறுத்தி வைப்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சீனாவில் கொரோனாவின் பி.எஃப்.7 என்ற உருமாறிய வகை தொற்று பரவலால், பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில்,  இந்தியாவிலும் அந்த வகை வைரஸ் பாதிப்பு 4 பேருக்கு உறுதியானதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்தியாவிற்கும் – சீனாவிற்கும் இடையே நேரடி விமானங்கள் ஏதும் இல்லை என்றும், தற்போதைக்கு சீனா வழியாக வரும் இணைப்பு விமானங்களின் சேவையை நிறுத்த உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.