புதிய வகை கொரோனா பரவல்; உயர்மட்ட குழுவுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை.!

சீனா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ( BF -7) அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சீனாவில் அதிவேகமாக பரவிவரும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. குஜராத், ஒடிசா உள்ளி்ட்ட மாநிலங்களில் BF -7 ஓமைக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்று சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மீண்டும் அமல்படுத்த தொடங்கி உள்ளன.

புதிய பிஎஃப்.7 வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா தொடர்பாக டெல்லியில் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவிட்டுள்ளார்.

முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆக்சிஜன் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவைகளின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கூட்டம் மிகுந்த பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்த பிரமர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.