புதுச்சேரியில் சாக்லேட் என நினைத்து, எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

புதுச்சேரியில், சாக்லேட் என நினைத்து, எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுசாரம் பகுதியை சேர்ந்த மேரி ரோஸ்லின், கணவர் இறந்த நிலையில், 3 வயது குழந்தை தியா மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

மேரி ரோஸ்லின் வேலைக்கு செல்லும் நிலையில், கடந்த 11ஆம் தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எலி பேஸ்ட்டை எடுத்து தின்று விட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தியா நேற்று உயிரிழந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.