கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக உணர்கிறோம்; ஆப்கன் பெண்கள் குமுறல்.!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்கால தடை விதித்தனர்.

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தாலிபான்கள் அறிவித்தனர். இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், ‘‘ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்த மோசமான முடிவுவானது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தாலிபான்கள் தலைமையின் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சியாகும்.

ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் கல்வியை தடுத்து நிறுத்தும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டின் விளைவாக, தாலிபான்கள் சர்வதேச சமூகத்திலிருந்து மேலும் விலகி அவர்கள் விரும்பும் சட்டப்பூர்வமான தன்மை மறுக்கப்படும்’’ என அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டது குறித்து, தாலிபான் அரசில், உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் நேதா முகமது நதீம், ‘‘துரதிர்ஷ்டவசமாக 14 மாதங்கள் கடந்தும், பெண்களின் கல்வி தொடர்பான இஸ்லாமிய எமிரேட்டின் உயர் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் செயல்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழகங்களுக்கு வரும் பெண்கள் ஒரு திருமணத்திற்கு செல்வது போல் ஆடை அணிந்தனர். வீட்டிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் சிறுமிகளும் ஹிஜாப் பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.

சில அறிவியல் பாடங்கள் பெண்களுக்கு ஏற்றதாக இல்லை. பொறியியல், விவசாயம் மற்றும் வேறு சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம் மற்றும் மரியாதை மற்றும் ஆப்கனிய கலாச்சாரத்துடன் பொருந்தவில்லை. ஆண்களின் துணை இன்றி சில பெண்கள் தனியாக பயணம் செய்கின்றனர்’’ என அவர் கூறினார்.

பத்திரிக்கையாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் உள்ளது..?

இந்தநிலையில் கூண்டுக்குள் அடைப்பட்ட பறவையாக தங்களை உணர்வதாக ஆப்கானிஸ்தான் பெண்கள் தெரிவித்துள்ளனர். பல பல்கலைகழகங்களை கொண்டுள்ள காபுலில், பல்கலைகழகங்களில் படிக்கும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 23 வயதான அமினி என்ற பெண் கூறும்போது, கூண்டுக்குள் அடைபட்ட பறவைகளாக எங்களை உணர்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவரை கட்டி தழுவி துக்கத்தை பகிர்ந்து கொண்டோம். ஏன் எங்களுக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்று கூறினார்.

ஆசியாவை ஆட்டிபடைத்த ஃப்ரெஞ்ச் சீரியல் கில்லர் விடுதலை.!

மற்றொரு பெண் கூறும்போது, எங்களால் எதுவும் செய்ய முடியாது, எங்களது வலிகளை கேட்க யாரும் இல்லை என கூறினார். மேலும் சில பெண்கள், தாலிபான்கள் இஸ்லாமை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். பெண்களின் கல்வியறிவை இஸ்லாம் தடுக்காது என கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.