கேஸ் மானியம் எத்தனை பேருக்கு வருது? உண்மைய சொல்லுங்க… செந்தில் பாலாஜி பொளேர்!

தி.க நிறுவனர் ஈ.வெ.ராமசாமியின் 49வது நினைவு தினத்தை ஒட்டி, கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர்

வழி நடத்தி வருகிறார்.

அதிமுக ஆட்சி

ஒன்றரை ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரி செய்து 85 சதவீத வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார். வரக்கூடிய ஆண்டுகளில் கோவை மண்ணிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளோடு கூடுதலான திட்டங்களை நிறைவேற்றுவார். கோவை மாநகராட்சியில் 114 கிலோ மீட்டர் மண் சாலைகள் உள்ளன.

5 ஆண்டுகள் ஆயுள்

இவற்றை அதிமுக ஆட்சியில் தார் சாலைகளாக மாற்றி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளையும் சரி செய்யவில்லை. ஒரு சாலைக்கு ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம். கோவை மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான சாலைப் பணிகளும் கடந்த ஆட்சியில் நடைபெறவில்லை. தற்போது புதிய சாலைகளை அமைக்க நிதி கொடுத்து திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

சாலைப் பணிகள்

211 கோடி அளவில் சாலை அமைக்கும் பணிக்கு நிதி தொடங்கப்பட்டு, கூடுதலாக 19 கோடி ரூபாய் சிறப்பு நிதியை முதல்வர் விடுவித்துள்ளார். எஞ்சிய நிதி மார்ச் மாதத்தில் விடுவிக்கப்பட்டு சாலைகள் புனரமைக்கப்படும். தனியார் பள்ளிகளில் மாணவர் குறிப்பேட்டில் சாதியை குறிப்பிடுவதற்கு கல்வி அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் எனக் கூறினார்.

எங்கே அந்த பாஜக?

பாஜக தமிழகத்தில் எங்கு உள்ளது. எத்தனை பேர் உள்ளனர். எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என்பது பற்றி தெரியாத கட்சி பாஜக. 345 ரூபாய் மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்து விட்டு பத்தாயிரம் ரூபாய் என பொய் சொல்லக் கூடியவர்கள். 37 வயதில் 20,000 புத்தகங்கள் படித்ததாக பொய் சொல்கின்றனர்.

கேஸ் மானியம் எங்கே?

பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் நிலை என்ன? இதுபற்றி அவர்களிடம் கேளுங்கள். கேஸ் மானியம் எத்தனை பேருக்கு வருகிறது. ஒரு பைசா கூட வரவில்லை ஜீரோ.

வாங்கி வங்கி அரசியல்

இப்படிப்பட்ட சூழலில் சிறந்த ஆட்சி நடத்தும் தமிழகத்திற்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையில் சமூக வலைதளத்தை பாஜகவினர் பயன்படுத்துகின்றனர். நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டில் பாஜக ஜெயித்தது. பாஜகவுக்கு எவ்வளவு ஓட்டு வங்கி முதலில் உள்ளது.

உதயநிதி வருகை

எவ்வளவு உறுப்பினர் என்பதை கேட்டு சொல்லுங்கள். அதை வைத்து ஒப்பிட்டு பார்க்கலாம். 234 தொகுதிகளில் தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார். முதல்வர் ஆசியோடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி விழா பேருரை ஆற்றவுள்ளார்.

சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு 29 கோடி நிதியை ஒன்றரை ஆண்டுகளில் முதல்வர் வழங்கினார். விரைவில் பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.