”இதுக்குதான் பாடல் வரிகளை முன்பே வெளியிட்டார்களா?” – துணிவு 3வது பாடல் Gangstaa வெளியானது!

அஜித்தின் துணிவு படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியான நிலையில் தற்போது AK Anthem என்ற Gangstaa பாடலை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

கேங்ஸ்டா பாடலின் வரிகள் முன்பே வெளியிடப்பட்டாலும், பாடல் தற்போது வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ட்விட்டரில் #ItsTimeForGANGSTAA என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் பாடல் வெளியான ஒரு மணிநேரத்திற்குள்ளேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இந்த கேங்ஸ்டா பாடலை ஜிப்ரானும், ஷபிர் சுல்தானும் இணைந்து பாட, வரிகளை விவேக் உடன் இணைந்து ஷபிர் சுல்தானும் எழுதியிருக்கிறார்.

விவேகம் படத்தில் வந்த தலை விடுதலை பாடல் பாணியில் துணிவு படத்தின் இந்த பாடல் அமைந்திருக்கிறது. வெளியான சில மணிகளிலேயே வியூஸ்களை குவித்தாலும் பாடல் வரிகளை நிறுத்தி நிறுத்தியே கேட்க வேண்டிய நிலையே இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

பாடலாக வரும் போது வரிகள் புரியாமல் போய்விடும் என்பதால்தான் முன்கூட்டியே கேங்ஸ்டா பாடல் வரிகளை படக்குழு வெளியிட்டிருக்கிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது.

இருப்பினும், “வா பதிலடிதான் தெரியுமடா, உனக்கு சம்பவம் இருக்கு பார் முடிவுல யார் பதிலடிதான் இனிமே பிரச்சனை எதுக்கு” போன்ற வரிகள் அஜித் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.