சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா

சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது மாதிரி, மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவின் ஷாகஞ்ச்(Shahganj) பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், சீனாவில் தங்கி பணிபுரிந்த நிலையில், விடுமுறையை ஒட்டி வீடு திரும்பியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது. மேலும், ஆக்ராவில் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.