ஆடையில் மறைத்து வைத்து 1,884 கிராம் தங்கம் கடத்தல் – 19 வயதான இளம்பெண் சிக்கினார்

கோழிக்கோடு,

துபாயில் இருந்து 1,884 கிராம் தங்கத்தை கடத்தி வந்த 19 வயதான இளம்பெண் கேரளாவில் சிக்கினார். காசர்கோட்டை சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஷகிலா என்பவர் துபாயிலிருந்து, கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இவர் தன்னுடைய ஆடையில் ஒரு கோடி மதிப்புள்ள 1,884 கிராம் தங்கத்தை ஆடையில் தைத்து மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.