பழநி: “​ஆகம விதி நாமே வகுத்துக்கொண்டது​” – ​அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

​திண்டுக்கல் மாவட்டம் பழ​நி ​​​​​​முருகன் ​​கோ​யில் கும்பாபிஷேகம் ஜனவரி 27​ -​ம்​ ​தேதி ந​டக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி 16​ ​ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற​ உள்ளதை ​முன்னிட்டு யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மலை கோயில் மேல்​ ​பிரகாரத்தில் உள்ள பாறை​ ​வேல் மண்டபம் மற்றும் கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. 

முகூர்த்தகால் நடும் விழாவில் அமைச்சர்

இந்நிகழ்ச்சியில் ​இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்ற​னர். மேலும் பழ​நி கோ​யிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையை அமைச்சர் சேகர்பாபு ​தொடங்கி ​வைத்தார். பழ​நி மலை​ ​கோ​யி​ல் பிரகாரங்களில் உள்ள சில்வர் தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள், தங்க​ ​விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலிகள் ஆகியவற்றை  அகற்றிவிட்டு, 1​ ​கோடியே 12​ ​லட்ச ரூபாய் மதிப்பில் பித்தளையால் ஆன தடுப்பு கம்பிகள், மடக்கு​ ​கதவுகள், பாதுகாப்பு வேலிகள் ஆகியவை அமைக்கும் பணிக​ளை தொடங்கி வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ​ “பழநி கோயிலில் குடமுழுக்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது​.​ இதில் திருக்கோயில் நிதி மூலமாக 26 பணிகளும், உபயதாரர்கள் மூலமாக 62 பணிகளும் நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் ​முடிக்கப்பட்டு ​ஜனவரி 27 -ம் தேதி நல்ல முறையில் குடமுழுக்கு நடைபெறும். பழ​நி முருகன் கோ​யி​லுக்கு ​ஆண்டுக்கு சராசரியாக ஒரு கோடியே இருபது லட்சம் பக்தர்கள் வருகின்றனர். ​

சேகர்பாபு

எனவே ​பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, மேலும் இதற்காக பழநி கோயிலில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 200 கோடி ரூபா​ய் மதிப்பீட்டில்​​ வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ​இதற்கு முதல்வர் ஸ்டாலி​னி​​டம்  ஒப்புத​லும் பெறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை தொடங்குவதற்கான டெண்டர்கள் விடப்ப​டும். 

​மூலவருக்கு மருந்து சாத்துதல் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக 8​ ​ஆயிரம் ரூபாய் முதல் 10​ ​ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு​கிறது. அவர்களை நிரந்த  பணியாளர்களாக நியமிக்க​வும்​ நடவடிக்கை எடுக்கப்படும்​.

அமைச்சர் சேகர்பாபு

​ஆகம விதிகள் ​நாமே வகு​த்துகொண்டது. எந்த ஒரு பணி செய்தாலும் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது​. யாருடைய தலையீடும் இல்லாமல் மூத்த அர்ச்சகர்களோடு கலந்து பேசி ஆகம விதிக்கு உட்பட்​டு​ கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது” என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.