பீகார்: வலுக்கட்டாயமாக விளை நிலத்தை உழ முயற்சி; தடுக்க முயன்ற பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு!

பீகார் மாநிலம், பெட்டியா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் 1985-ம் ஆண்டு நிலமற்ற தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய மானியத்தின் ஒரு பகுதியாக நிலம் வழங்கப்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த நிலம் தனக்குத்தான் சொந்தம் என ஷிஷிர் துபே என்பவர் உரிமைக் கோரியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், 2004-ம் ஆண்டு அந்த நிலத்தை முடக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆனால் இன்று காலை, அந்த நிலத்துக்கு உரிமைக் கொண்டாடும் ஷிஷிர் துபே, டிராக்டரை கொண்டு வந்து, வலுக்கட்டாயமாக வயல் நிலத்தை உழ முயன்றிருக்கிறார். இதற்கு அந்தப் பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்க வந்தபோது, ​​துப்பாக்கியால் அந்தப் பெண்களை சாரமாரியாக சுட்டிருக்கிறார். இதனால் ஐந்து பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு

உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, அந்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட ஷிஷிர் துபே கைதுசெய்யப்பட்டார். மேலும் விசாரணை தொடர்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. காயமடைந்த பெண்கள் பெட்டியாவிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.