பெண்கள் தேசிய குத்துச்சண்டை: தங்க பதக்கம் வென்ற அசத்திய லவ்லினா, நிகாத் ஜரீன்

போபால்,

6-வது தேசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் கோபாலில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

தெலுங்கானா அணிக்காக களம் கண்ட ஜரீன் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் ரெயில்வே வீராங்கனை அனாமிகாவை தோற்கடித்தார். இதே போல் 75 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான அசாமின் லவ்லினா 5-0 என்ற கணக்கில் அருந்ததியை (சர்வீசஸ்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

இந்த போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 10 பதக்கங்களை குவித்த ரெயில்வே அணி மீண்டும் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.