மகளுக்கோ, சகோதரிகளுக்கோ குடிகாரன்களை கட்டி வைக்காதீங்க…ஒன்றிய அமைச்சர் அட்வைஸ்

சுல்தான்பூர்: குடிகாரர்களுக்கு தங்களது மகளையோ, சகோதரிகளையோ திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று ஒன்றிய இணை அமைச்சர் கவஷல் கிஷோர் தெரிவித்து உள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலம், லம்புவா சட்டமன்ற தொகுதியில் போதைக்கு அடிமையாவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் பேசியதாவது: ஒரு குடிகாரனின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. எம்.பி.யாக இருந்த நானும், எம்.எல்.ஏ.வாக இருந்த எனது மனைவியும் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிலையில், பொது மக்கள் எப்படி காப்பாற்றுவார்கள்.

என் மகன் குடி பழக்கத்தால் திருமணம் செய்த 6 மாதத்தில் இறந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, எனது மகன் இறந்தபோது, ​​அவரது மகனுக்கு இரண்டு வயதுதான். அதனால் அவனுடைய மனைவி விதவையானாள். இதிலிருந்து உங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை நீங்கள் காப்பாற்ற வேண்டும். குடிகாரர்களுக்கு தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை திருமணம் செய்து  வேண்டாம். குடிகார அதிகாரியை விட ரிக்ஷாக்காரன் அல்லது கூலித் தொழிலாளியே சிறந்த மணமகன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.