அசாமில் ஆலங்கட்டி மழை 4500 வீடுகள் சேதம்

தின்சுகியா: அசாம் மாநிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் திப்ரூகர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. பெரிய பெரிய பனிக்கட்டியாக மழை பெய்தது. இதனால் திப்ரூகர் மாவட்டத்தில் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் அதிகாலை வரை மோரன், திங்காங், லாஹோவல், லெகாய், நகர்கடியா உள்ளிட்ட பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல வீடுகள் சேதம் அடைந்தன. 2 அரசு பள்ளி கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.