இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து 18 ஆயிரம் பேர் அடுத்த கட்ட உடல் தகுதித் தேர்வுக்காக அழைக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் என 3 ஆயிரத்து 552பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர்மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 295 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 99,820 பேர் எழுதினர். 66,908 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், அந்த தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பாகத் தேர்வுவாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்ததேர்வில் மொத்தம் ஒரு லட்சத்து 98,226 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உடல் தகுதித் தேர்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தின் அடிப்படையில் கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 18,671 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டத் தேர்வில்கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.