டிச.30ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். குடும்ப அட்டைதாரர்கள் எந்த கிழமைகளில் பொங்கல் தொகுப்பு பெறலாம் என்பது டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஜனவரி 2ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒருநாளைக்கு நகர் பகுதியில் 300 கார்டுகளுக்கும், ஊரக பகுதியில் 200 கார்டுகளுக்கும் டோக்கன் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு டோக்கன் தருவதில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.