திருநெல்வேலி அருகே சோகம்.! மது குடிப்பதை கண்டித்ததால் விவசாயி எடுத்த விபரீத முடிவு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் மது குடிப்பதை கண்டித்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கீழதேவநல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமையா (65). இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ராமையாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் குடும்பத்தினர் ராமையாவை கண்டித்துள்ளனர். இதில் மன வேதனையடைந்த ராமையா வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக சம்பவதன்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நல்ல அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இராமையா உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.