பீகாரில் தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்து கொண்ட மகள்

பீகார்: தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது மகள் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கயா பகுதியை சேர்ந்த பூனம் இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இதனை இடையே அவரது மகள் ஷாந்தினிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. தனது கண்முன்னேயே தனது மகளின் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக பூனம் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதை அறிந்த ஷாந்தினி தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையில், மணமகன் வீட்டாரிடம் அவர் பேசிய நிலையில், அவர்களும் ஷாந்தினி விருப்பதிற்கு சம்மதம் தெரிவிக்கவே, இதனை அடுத்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தனது தாயின் முன்னே ஷாந்தினி திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.