கார்பா: பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து ஸ்க்ரூ டிரைவரால் 51 முறை பஸ் டிரைவர் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கார்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷ் (வயது 20) என்ற மகளும் உள்ளனர். நீல்குஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்ல ஜாஷ்பூர் – கார்பா இடையே செல்லும் தனியார் பஸ்சில் பயணித்துள்ளார். அந்த பஸ்சில் கண்டக்டரான ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். ஷபாஷ்கான் கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அதன்பின் நீல்குஷ் அவரிடம் பேசுவது இல்லை. மேலும் ஜாஷ்பூரில் ஒரு நபருடன் நீல்குஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஷபாஷ் கான் அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் ராய்ப்பூர் வந்துள்ளார். பின்னர் நீல்குஷ் வீட்டிற்கு ஷபாஷ்கான் சென்றுள்ளார்.அங்கு தனியே இருந்த நீல்குஷ்சை ‘ஸ்குரு டிரைவரால்’ சரமாரியாக குத்தினார். நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் 51 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நீல்குஷ் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதன்பின் ஷபாஷ் கான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த கொடூர கொலையை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய ஷபாஷ் கானை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.