மும்பையில் அம்மை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கு அம்மை நோய் பரவி வருகிறது.
மகராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் தொற்று எண்ணிக்கை 1, 162 ஆக உள்ளது. இதில் மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. அம்மை நோயால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப் படுவதாகவும், தும்மல் மற்றும் இருமல் மூலம் பரவும் அம்மை பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்துவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்