விஜய்சேதுபதியின் அறிவுரையை பின்பற்றுகிறேன் ; அசோக்செல்வன்

சமீபகாலமாக நம்பிக்கை தரும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் மலையாளத்தில் வெளியான மரைக்கார் என்கிற வரலாற்று படத்தில் கூட வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், சமீப காலமாக நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறும்போது ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நடித்து வந்தேன். ஆனால் விஜய்சேதுபதி தான் என்னை அழைத்து அப்படி நடிக்க வேண்டாம், ஒரே நேரத்தில் நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடிக்க வேண்டும் என்றும் எந்த படம் எப்போது ரிலீஸாகும் என தெரியாததால் ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்கலாம் என காத்திருப்பது திரையுலக பயணத்தில் ஒரு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் என்று கூறினார். அதைத் தொடர்ந்தே தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அவர் சொன்னதுபோல ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியாக வேண்டிய நான் நடித்த வேழம் என்கிற படம் இந்த வருடம் தான் வெளியானது என்று கூறியுள்ளார் அசோக்செல்வன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.