அமராவதி: ஆந்திர மாநிலம் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் மாவட்டம் கந்துக்கூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
