இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம்

டெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது. அதில் டெல்லி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கடித்ததில் குற்றச்சாட்டியுள்ளார்.

அடுத்தகட்ட நடைபயணம் ஜனவரி 3ம் தேதி தொடங்க உள்ள ஒற்றுமை யாத்திரை பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் வழியாக செல்ல உள்ளது. பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாத்திரையில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களை உளவுத்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இவ்வாறு கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.