உணவகத்தில் கூடுதலாக சால்னா தராததால் மேலாளரை தாக்கி, உணவகத்தை சேதப்படுத்திய 2 இளைஞர்கள் கைது!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள உணவகத்தில் கூடுதலாக சால்னா தராததால், மேலாளரை தாக்கி, உணவகத்தை சேதப்படுத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு உணவகத்திற்கு வந்த கிருஷ்ணகுமார், ஜெய் கணேஷ் ஆகிய இருவர், பிரைட் ரைஸ் வாங்கி, கூடுதலாக சால்னா மற்றும் சாஸ் கேட்டுளனர்.

தேவையான அளவு தான் தர முடியும் என உணவக மேலாளர் கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும், கரண்டி மற்றும் செங்கல்லைக் கொண்டு மேலாளரை தாக்கியதோடு, உணவகத்தில் இருந்த பாத்திரங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக உணவக மேலாளர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.