உருமாறிய BF-7 கொரோனா வேகமாக பரவக் கூடியது என எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை சைதாப்பேட்டை 168வது வார்டில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நான்கு லட்சம் ரூபாயை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

BF-7 உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையது என்பதால், புத்தாண்டு கொண்டாட்டங்கள், தியேட்டர்கள், திருமண நிகழ்வு, திருவிழாக்கள் போன்றவற்றில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

தமிழக சுகாதாரத்துறை ஐசியு-வில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர், அவர்தான் தற்போது ஐசியூவில் இருந்து மீண்டுள்ளதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.