ஒரே நாடு, ஒரே தேர்தல்; `பொதுச்செயலாளர்' எனக் குறிப்பிட்டு இபிஎஸ்-ஸிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்பு

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததையடுத்து, ஓ.பி.எஸ் உட்பட அவர் தரப்பினர் கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இதில் இரு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றதையடுத்து, தற்போது அ.தி.மு.க கட்சி கணக்கு வழக்கு என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வந்துவிட்டது. அதோடு அ.தி.மு.க-வின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என ஓ.பி.எஸ்-ஸுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து அதிகாரபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க வரவு செலவு தொடர்பாக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியின் கையெழுத்துடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடிதத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் மத்திய சட்டத்துறை ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க-வின் `பொதுச்செயலாளர்’ எனக் குறிப்பிட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாகக் கருத்து தெரிவிக்குமாறு கடிதம் அனுப்பியிருக்கிறது.

மத்திய சட்டத்துறை ஆணையத்தின் கடிதம்

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவரும் நிலையில், இது குறித்த கருத்தை வரும் ஜனவரி 16-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு சட்டத்துறை ஆணையம் கூறியிருக்கிறது. அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், பொதுச்செயலாளர் என சட்டத்துறை ஆணையம் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.