சீனாவில் கடும் பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து..!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில், கடும் பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.

செங்சுவு நகரில், மஞ்சள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பனிமூட்டத்தால் சாலையில் தெரிவுநிலை குறைந்து, கார்கள் மற்றும் லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி சேதமடைந்த வீடியோக்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்ததாகவும், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.