சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் தேதியை 3வது முறையாக மாற்றி உத்தரவிட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான டோக்கன் வழங்கும் தேதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 வழங்கு வதை முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஜனவரி 5ம் தேதி மாற்றப்பட்டு தற்போது ஜனவரி 9ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது. அறுவைடைத் திருநாளான […]
