மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட ஆளுநருக்கு அறிவுறுத்துவோம் – அமைச்சர் வி.கே.சிங்..!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சாமி தரிசனம் செய்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  கானாடுகாத்தான் கால்நடைப் பண்ணைக்குள் உள்ள (தமிழகத்தின் முதல்) ஃப்ளையிங் கிளப்பில், விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன்வருமானால், அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய தயாராக உள்ளது என்றார்.

தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழக அரசு விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றும், இருப்பினும் மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட ஆளுநருக்கு அறிவுரை கூறுவோம் எனவும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.