முதுமலை அருகே நேற்றிரவு யானை தாக்கி விவசாயி பலி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி அருகே உள்ளது சிங்காரா. இங்குள்ள மாவனல்லாவில் சோகப்பட்டி என்ற பகுதியில் உள்ள தோட்டத்தில் நேற்றிரவு அப்பகுதியை சேர்ந்த விவசாயி மாதன் (46) என்பவரை காட்டு யானை தாக்கியது. மாதன் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், மாதனை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.