ஒரே நாளில் 120 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல்; ரஷ்யா அதிரடி.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் எனவு, அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.

பல மேற்கத்திய நாடுகளில் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் உதவியால் உக்ரைன் போர் நீண்டு வருவதால், போரை நிறுத்த வேண்டும் என விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது. அதேபோல் இந்த போரால் இலங்கை நாடு திவாலாகிவிட்டது.

கடந்த 10 மாதங்களாக நீண்டு வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் தயங்காது என ரஷ்ய அதிபர் புதின் கடந்த 3ம் தேதி தெரிவித்தார். இந்தநிலையில் ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்க, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் ஆற்றல் மையங்கள் மற்றும் நீர் வளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அதை சமாளிக்க ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதையடுத்து 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளது.

ஒரு பீர் ரூ.140 ஆ? ரூ.160 ஆ? டாஸ்மாக் கடையில் வாக்குவாதம் !

அதேபோல் உக்ரைனில் அணு ஆயுதத் தாக்குதலை ரஷ்யா நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா அதன் தாக்குதலில் பின்தங்கிய நிலையில், ரஷ்யா ஒரு திருப்புமுனையை அடைய அதன் அணு ஆயுதங்களை நாடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக நேட்டோ துணை பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

இனிமேல் தான் பல வேலைகள் உள்ளது; விடுதலைக்கு பின் பிரெஞ்சு சீரியல் கில்லர்.!

இந்தநிலையில் இன்று ஒரே நாளில் 120 ஏவுகணைகளை கொண்டு உக்ரனை ரஷ்யா தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் விமானப்படை கூறும்போது, ‘‘உக்ரைனின் தலைநகரம், கிழக்கு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா 120 ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளது. உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு குறிவைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது’’ என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.