கொவிட் 19 சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டு (2022) ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக மீள ஆரம்பிக்கப்பட்டது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டின் இது வரைக்கும் 510 பிரசவங்கள் இடம்பெற்றதாக அந்த வைத்தியாசலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.
“இந்த வைத்தியசாலையைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான வரலாற்று சாதணையாகு” மென அத்தியட்சகர் கூறினார்.
இதனடிப்படையில் இவ்வாண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2022 டிசம்பர் 28ம் திகதி இது வரைக்கும் 510 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் 508 சுகப்பிரசவங்கள் நிகழ்ந்துள்ளதுடன் இரண்டு குழந்தை வயிற்றுக்குள் மரணித்து பிறந்துள்ளன.
இந்த வரலாற்றை அடைவதற்குக் காரணமாக இருந்த இந்த விடுதியின் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள், சிற்றூழியர்கள் என அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அத்துடன் மக்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை எந்த வித அச்சமோ பயமோ இன்றி மகிழ்ச்சியாக பயன்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
M M Fathima Nasriya