தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட உள்தமிழக மாவட்டங்களில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடனே இருக்கும் என்றும் கூறியுள்ளது.

மேலும், டிச.31ம் தேதி முதல், ஜனவரி 2ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.