பி.எப்.7 கொரோனா பரவல் எதிரொலி: 6 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம்; ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: கொரோனா ஓமிக்ரான் பிஎப்-7பரவல் உலக நாடுகளை அச்சுறுத்த்திவரும் நிலையில், பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவும் தற்போது சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தென்கொரிய, தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவிடவேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த இணையதள பதிவேற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கும் என கூறியுள்ளார். மேலும் 2023-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் சர்வதேச பயணிகள் 72 மணி நேரத்துக்கு முன்பு இந்த ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் ரெண்டாம் அடிப்படையில் 2% இந்திய விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த குறிப்பிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.