ஆற்காடு: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 63 பக்தர்கள் நேற்று மேல்மருவத்தூர் கோயிலுக்கு சுற்றுலா பஸ்சில் சென்றனர். பஸ்சை முத்துக்குமார்(42) என்பவர் ஓட்டினார். நேற்று அங்கு தரிசனம் முடிந்து இரவு ஊருக்கு திரும்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புதுப்பாடி அருகே திண்டிவனம் சாலையில் உள்ள சக்கரமல்லூர்-கடப்பந்தாங்கல் பகுதியில் நள்ளிரவு பஸ் வந்தது.
அப்போது எதிரே வந்த ஒரு வாகனம் மோதுவதுபோல் வந்ததாக தெரிகிறது. இதனால் டிரைவர் முத்துக்குமார், பஸ்சை வலதுபுறமாக திருப்ப முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. பஸ்சில் இருந்த 14 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அவர்கள் அனைவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.