ராகுல்காந்தி 2020-ம் ஆண்டிலிருந்து 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி உள்ளார் – சி.ஆர்.பி.எஃப்

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 2020-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணம் உள்பட 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியிருப்பதாக சி.ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.

டெல்லி நடைப்பயணத்தின்போது ராகுல்காந்தியின் பாதுகாப்பில் மீறல்கள் இருந்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதிய நிலையில், சி.ஆர்.பி.எஃப் இதனை தெரிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படுவது குறித்து ராகுல்காந்திக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டதாகவும், முன்கூட்டிய பாதுகாப்பு பணி உட்பட ராகுல்காந்திக்கான பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட்டு வருவதாகவும் வேணுகோபாலுக்கு சி.ஆர்.பி.எஃப் எழுதிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.